2024 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மின்னணு கொள்வனவு செயல்முறையை இலத்திரனியல் மயமாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கியுடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் மே மாதம் கைச்சாத்திடப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.