வட மாகாணத்தில் இவ்வருட யூன் மாத கால பகுதி வரை 1834 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ். மாவட்டத்தில் மட்டும் 1527 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 64 பேரும் மன்னார் மாவட்டத்தில் 66 பேரும் வவுனியா மாவட்டத்தில் 107 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடமாகணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இவரிடம் நிறைவடைய ஆறுமாதங்கள் உள்ள நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.