குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அந்த
வகையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட
குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள்
மக்கள் பாவனைக்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று(13) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், திணைக்கள அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.