• May 03 2024

யாழில் வழிப்பறிக்கொள்ளைகள் அதிகரிப்பு...!samugammedia

Anaath / Nov 5th 2023, 5:26 pm
image

Advertisement

யாழ் குடாநாட்டில் உள்ள காரைநகர் - யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை மறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பித்துள்ளனர்.

வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உள்பட மேலும் பலரிடம் குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.

அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுகாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழில் வழிப்பறிக்கொள்ளைகள் அதிகரிப்பு.samugammedia யாழ் குடாநாட்டில் உள்ள காரைநகர் - யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 2 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை மறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பித்துள்ளனர்.வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உள்பட மேலும் பலரிடம் குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுகாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement