பயணிகள் பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு பொருத்துவதை கட்டாயமாக்க எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு முடிவு செய்துள்ளது.
எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் கூடிய போதே குறித்த முடிவு எட்டப்பட்டது.
மேலும், பஸ்களுக்கு வீதி அனுமதிப் பத்திரம் வழங்கும் போது, சம்பந்தப்பட்ட பஸ்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தலைவர் அறிவுறுத்தினார்.
பேருந்தில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படுவதன் முக்கியத்துவத்தை குழுவில் காவல்துறை சார்பில் ஆஜரான காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதன்படி, இனிவரும் காலங்களில் பஸ்களில் சிசிடிவி கமரா அமைப்புகளை கட்டாயம் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தலைவர் பணிப்புரை விடுத்தார்.
இலங்கைப் பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் பொருத்துவது கட்டாயம். வெளியான அதிரடி அறிவிப்பு பயணிகள் பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு பொருத்துவதை கட்டாயமாக்க எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு முடிவு செய்துள்ளது.எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் கூடிய போதே குறித்த முடிவு எட்டப்பட்டது.மேலும், பஸ்களுக்கு வீதி அனுமதிப் பத்திரம் வழங்கும் போது, சம்பந்தப்பட்ட பஸ்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தலைவர் அறிவுறுத்தினார். பேருந்தில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படுவதன் முக்கியத்துவத்தை குழுவில் காவல்துறை சார்பில் ஆஜரான காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். இதன்படி, இனிவரும் காலங்களில் பஸ்களில் சிசிடிவி கமரா அமைப்புகளை கட்டாயம் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தலைவர் பணிப்புரை விடுத்தார்.