கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முழங்காவில் பிரதேசத்தில் முழங்காவில் விநாயகர் ஆலயம், பாடசாலை ஆசிரியர் விடுதி, பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொதுத் தொல்லை ஏற்படுத்துவதாக தெரிவித்து போலீசாரால் வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது இதனை அடுத்து இன்றையதினம் (06) குறித்த வழக்கு விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
அமைப்புகள் மற்றும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் சட்டத்தரணி எஸ். விஜயராணி உள்ளிட்டோர் முன்னிலையாக இருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த மதுபானசாலைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.