நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி தமிழ்நாட்டை சேர்ந்த முனைவர் மருதுமோகனால் சென்னை பல்கலைகழகத்தில் ஆய்வுசெய்து எழுதப்பட்ட “சிவாஜி கணேசன்” ஆய்வுநூல் அறிமுகவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்பல்கலைகழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் எஸ். ரகுராம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் யாழ் இந்தியத்துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ் கலந்துகொண்டு தொடக்க உரையை நிகழ்துவார், சிறப்புரையை பேராசிரியர் சி.சிவலிங்கராஜா நிகழ்த்துவதுடன், நூலினை யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா வெளியிட்டு வைப்பார்.
நிகழ்வில் சிறப்பு அதிதியாக சிவாஜிகணேசனின் மகனான ராம்குமார் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் விசேடஅம்சமாக சிவாஜி கணேசனின் புகழுக்கு காரணம் வசனமா. உடல்மொழியா எனும் தலைப்பில் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது.
யாழிற்கு வருகின்றாரா நடிகர் திலகம் சிவாஜி மகன் samugammedia நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி தமிழ்நாட்டை சேர்ந்த முனைவர் மருதுமோகனால் சென்னை பல்கலைகழகத்தில் ஆய்வுசெய்து எழுதப்பட்ட “சிவாஜி கணேசன்” ஆய்வுநூல் அறிமுகவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்பல்கலைகழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. பேராசிரியர் எஸ். ரகுராம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் யாழ் இந்தியத்துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ் கலந்துகொண்டு தொடக்க உரையை நிகழ்துவார், சிறப்புரையை பேராசிரியர் சி.சிவலிங்கராஜா நிகழ்த்துவதுடன், நூலினை யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா வெளியிட்டு வைப்பார். நிகழ்வில் சிறப்பு அதிதியாக சிவாஜிகணேசனின் மகனான ராம்குமார் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வில் விசேடஅம்சமாக சிவாஜி கணேசனின் புகழுக்கு காரணம் வசனமா. உடல்மொழியா எனும் தலைப்பில் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது.