வல்வெட்டித்துறை - முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டுள்ளது.
வானில் பறக்க விடப்பட்ட புகைக் கூண்டு வீடு ஒன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் சில விசமிகளால் வெளியிடப்பட்ட புரளி என தற்போது தெரியவந்துள்ளது.
ஒரு வீட்டின் முன்புறமாக மேற்குறித்த புகைக்குண்டு எரியாமல் பாதுகாப்பாக வீழ்ந்துள்ளமை ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.