மன்னார் நகர சபையை, மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதும் இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதனை பிரதமருக்கு தெரியப்படுத்தும் நோக்கில் தினேஸ் குணவர்தனவிற்கு இன்று அவசர கடிதம் ஒன்றையும் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பி வைத்துள்ளார்.
விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.