யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான மஹா கும்பாபிசேகம் இன்றையதினம்(08) நடைபெற்றது.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ சிதம்பர லக்ஷ்மி திவாகரன் குருக்கள் தலைமையில் விநாயகப்பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் காலை 8.10முதல் 10.20 வரையான சுபமூர்த்த வேளையில் மஹா கும்பாபிசேகம் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா உள்ளிட்ட பீடாதிபதிகள் இபேராசிரியர்கள்இ விரிவுரையாளர்கள் இபல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.