• Sep 17 2024

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்...! முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு...! samugammedia

Sharmi / Oct 26th 2023, 10:16 am
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று(26) காலை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சாள்ர்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெறுகின்றது.

இதன் போது கல்வி, சுகாதாரம், கால்நடை, விவசாயம், கமநல சேவைகள், போக்குவரத்து, காணி, நீர்வழங்கல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேபோன்று பொலிஸ் அதிகாரிகள்,  அரச திணைக்களத் தலைவர்களும் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும்  கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம். முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு. samugammedia யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று(26) காலை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சாள்ர்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெறுகின்றது.இதன் போது கல்வி, சுகாதாரம், கால்நடை, விவசாயம், கமநல சேவைகள், போக்குவரத்து, காணி, நீர்வழங்கல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.அதேபோன்று பொலிஸ் அதிகாரிகள்,  அரச திணைக்களத் தலைவர்களும் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும்  கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement