யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகமும் தொல்லியல் அருங்காட்சியக இணையத்தளமும் இன்று (24) காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம், வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம் உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருங்காட்சியகம் வரலாற்றுத்துறை முதல் பேராசான் கலாநிதி கா.இந்திரபாலாவால் அடித்தளமிடப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கத் தூதரகத்தினதும், மத்திய கலாசார நிதியத்தினதும் அனுசரணைகளாலும் தூர நோக்குடன் நவீன அருங்காட்சியகமாக பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் உருப்பெறச் செய்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
யாழ். பல்கலையில் கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் திறந்துவைப்பு.samugammedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகமும் தொல்லியல் அருங்காட்சியக இணையத்தளமும் இன்று (24) காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம்,வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம் உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருங்காட்சியகம் வரலாற்றுத்துறை முதல் பேராசான் கலாநிதி கா.இந்திரபாலாவால் அடித்தளமிடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கத் தூதரகத்தினதும், மத்திய கலாசார நிதியத்தினதும் அனுசரணைகளாலும் தூர நோக்குடன் நவீன அருங்காட்சியகமாக பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் உருப்பெறச் செய்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.