சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் செ.புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
புருசோத்தமனின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுற்றுவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.
2006 – 2007 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.