யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்திற்கு சென்றிருந்த பெண் நாடு திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று (28) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் சிவசுகந்தி (43) என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடல் விமான நிலைய போலிசார் உதவியுடன் அரச மருத்துமனைக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது.
குறித்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் சென்னை விமான நிலைய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.