ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் பணிநயப்பு நினைவுமலர் வெளியீட்டு நிகழ்வு இன்று(7) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது.
நெய்தலம் இயக்குநர் அருட்கலாநிதி அமிர்த பிரான்ஸிஸ் யெயசேகரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம விருந்தினராகவும், யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ந.சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் ஜம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உறவினர்கள், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்