மதுரங்குளி நகருக்கு அருகில் அஜாக்கிரதையாக பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சுரேந்திர அனுருத்திக என்ற இளைஞனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
சாலியவெவ பிரதேசத்தில் வசிக்கும் மற்றைய இளைஞனும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் திசை நோக்கி பயணித்த போது எதிர்திசையில் கவனக்குறைவாக பயணித்த லொறியொன்று முந்திச் செல்ல தயாரான போது மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த லொறி மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு திசை நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதியை கைது செய்துள்ள மதுரங்குளி பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதியின் கவனக்குறைவால் பறிபோன இளைஞனின் உயிர். samugammedia மதுரங்குளி நகருக்கு அருகில் அஜாக்கிரதையாக பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சுரேந்திர அனுருத்திக என்ற இளைஞனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.சாலியவெவ பிரதேசத்தில் வசிக்கும் மற்றைய இளைஞனும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.விபத்தில் உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் திசை நோக்கி பயணித்த போது எதிர்திசையில் கவனக்குறைவாக பயணித்த லொறியொன்று முந்திச் செல்ல தயாரான போது மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த லொறி மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு திசை நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.லொறியின் சாரதியை கைது செய்துள்ள மதுரங்குளி பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.