இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு, பொரளையில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காணொளிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர்
தரிந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கான காரணத்தைப் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
கைது செய்யப்படும்போது இவரைப் பொலிஸார் தலையில் தாக்கியுள்ளனர் என்று அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கைது
செய்யப்பட்டு பொரளை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு தடுத்து
வைக்கப்பட்டிருந்த தரிந்துவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பார்வையிட்டனர்.
அத்துடன் கைதுக்கு
எதிராகக் கடும் கண்டனங்களையும் அவர்கள் வெளியிட்டனர்.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது