காத்தான்குடி காங்கேயனோடையை சேர்ந்த B.M.தில்ஷாத் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் (27) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் காத்தான்குடி காங்கேயனோடை அல்-அக்ஸா மஹாவித்தியாலயம் மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும்(வெளிநாட்டு வேலை வாய்ப்பு) கடமையாற்றி வருகிறார்.
அதீத சமூக ஈடுபாடு கொண்ட இவர் கச்சிமுகம்மது பதுர்தீன், சஹீதுலெப்பை றகுமா பீபி ஆகியோர்களின் சிரேஷ்ட புதல்வருமாவார்.