• Apr 30 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அடக்குமுறை - தொடரும் போராட்டம்!

Tamil nila / Apr 17th 2024, 6:40 pm
image

Advertisement

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 24 நாளாக இன்று (17)   கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலின் கொடூரத்திலும் நிழல் கூடாரம் அமைக்கத் தடை விதித்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக தீர்விற்கான தமது கோரிக்கைகளை முன் வைத்து  பொதுமக்கள்  தம்மைக் காக்க பனை மட்டைகளைத் தாங்கி போராடி வருகின்றனர்.


இந்த   பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை(25)    பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறலுக்குமான குறித்த  எதிர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் காலை மாலை இரவு என மாறி மாறி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அடக்குமுறை - தொடரும் போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 24 நாளாக இன்று (17)   கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.சுட்டெரிக்கும் வெயிலின் கொடூரத்திலும் நிழல் கூடாரம் அமைக்கத் தடை விதித்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக தீர்விற்கான தமது கோரிக்கைகளை முன் வைத்து  பொதுமக்கள்  தம்மைக் காக்க பனை மட்டைகளைத் தாங்கி போராடி வருகின்றனர்.இந்த   பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை(25)    பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறலுக்குமான குறித்த  எதிர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் காலை மாலை இரவு என மாறி மாறி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement