முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கெஹலியவினுடைய அமைச்சுப்பதவியை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடாது என அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறையின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும், ஊழல்களுக்கும் பின்னணியில் கெஹெலிய தான் இருந்திருக்கிறார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.