புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தின் மீகஸ்வெவ பகுதியில் கொம்பன் யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானைக் குட்டி சுகையீனமுற்ற நிலையில் உயிரிழந்திருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த யானைக் குட்டிக்கு அநுராதபுர மிருக வைத்தியசாலையின் மிருக வைத்தியரினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த யானைக் குட்டி 3 அரை அடி உயரம் எனவும் 1 அரை வயது எனவும் மதிக்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.