தமிழ் சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்பு பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி கையளிக்கப்பட்டுள்ளது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்பு குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரமே இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதிக்கு வழங்கி வைத்துள்ளார்.
புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், புத்தாண்டில் வேலைக்கு புறப்பட்டு செல்லுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கான சுப நேரங்கள் மேற்படி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரம். தமிழ் சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்பு பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி கையளிக்கப்பட்டுள்ளது.கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்பு குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரமே இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டுள்ளது.இதனை புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதிக்கு வழங்கி வைத்துள்ளார்.புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், புத்தாண்டில் வேலைக்கு புறப்பட்டு செல்லுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கான சுப நேரங்கள் மேற்படி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.