மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளைவரை முன்னெடுக்கப்பட்டுவரும் மலையக எழுச்சி பயணத்துக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஆதரவு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தம்புள்ளையில் இருந்து ஆரம்பமான பாத யாத்திரையில் பங்கேற்று அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம்,பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 'மலையக எழுச்சி பயணம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.