நடைபெறவிருந்த கன்னிப் பேரணியை ஒத்திவைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இன்று (23) பிற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்திவைப்பு தற்காலிக நடவடிக்கை எனவும், மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கன்னிப் பொதுக்கூட்டம் அநுராதபுரம் சல்காடு மைதானத்தில் நடைபெறுவதற்குத் தயாராகியுள்ளது.