வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மருதமடு வட்டாரத்தில்
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரத்தின் கிராம தலைவர்களுடான சந்திப்பு இன்று
(12) மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ்
பகுதிகளிற்கான அமைப்பாளர் நிரோசனின் ஒழுங்குபடுத்தலில்
பரசன்குளம் ஓமந்தையில் வட்டார வேட்பாளர் அஞ்சலா தலைமையில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
வேட்பாளரின்
தலைமை உரையுடன் தொடர்ந்து துணை வேடப்பாளர்களான குமார், மற்றும் அலுவலக
பொறுப்பாளர் சாந்தன் ஆகியோர் கட்சியின் செயற்பாடுகள் எதிர்காலத்தில்
செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக
விளக்கமளிக்கப்பட்டதுடன் கிராம தலைவர்களின் கேள்விகளுக்கு பதில்
அளிக்கப்பட்டிருந்தது.
இதில்
கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், கோவில் அமைப்பு தலைவர்கள், முன்பள்ளி
ஆசிரியர்கள், சமுர்த்தி தலைவர்கள், விளையாட்டு கழக தலைவர்கள், மாதர் சங்க
தலைவிகள், முதியோர் சங்க தலைவர்கள், கமக்கார அமைப்பு தலைவர்கள் போன்றோர்கள்
கலந்து கொண்டிருந்தார்கள்.