கர்நாடகாவின் - தெற்கு பெங்களூர் பகுதியில் வாடகை வீடொன்றில் காதலர்கள் இருவர் நீண்ட நாட்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
வைஷ்ணவ் (வயது 24) உள்ளூர் நிறுவனம் ஒன்றில் திட்டமிடல் விரிவாப்பல் பிரிவில் செயலதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
அவருடன் ஒன்றாக வசித்த இளம்பெண் தேவி (வயது 24) தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
சில காலம் சென்ற பின்னர் வைஷ்ணவுக்கு தேவி மீது சந்தேகம் வந்துள்ளது. அவருக்கு வேறு எவருடனோ தொடர்பு உள்ளது என்று வைஷ்ணவ் சந்தேகித்துள்ளார். இதுபற்றி தேவியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார். நேற்று முன்தினமும் இதுபோன்று இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த அந்த நபர், சோறு சபைக்கும் உபகரணத்தை (Rice Cooker) கொண்டு அந்த பெண்ணை அடித்து, தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த குறித்த பெண், துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தால் காதலியை கொடூரமாக அடித்துக் கொலை செய்த காதலன் samugammedia கர்நாடகாவின் - தெற்கு பெங்களூர் பகுதியில் வாடகை வீடொன்றில் காதலர்கள் இருவர் நீண்ட நாட்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.வைஷ்ணவ் (வயது 24) உள்ளூர் நிறுவனம் ஒன்றில் திட்டமிடல் விரிவாப்பல் பிரிவில் செயலதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.அவருடன் ஒன்றாக வசித்த இளம்பெண் தேவி (வயது 24) தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.சில காலம் சென்ற பின்னர் வைஷ்ணவுக்கு தேவி மீது சந்தேகம் வந்துள்ளது. அவருக்கு வேறு எவருடனோ தொடர்பு உள்ளது என்று வைஷ்ணவ் சந்தேகித்துள்ளார். இதுபற்றி தேவியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார். நேற்று முன்தினமும் இதுபோன்று இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த அந்த நபர், சோறு சபைக்கும் உபகரணத்தை (Rice Cooker) கொண்டு அந்த பெண்ணை அடித்து, தாக்கியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த குறித்த பெண், துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.