நுகேகொட பிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு சமூக ஊடகங்களில் பல்வேறு வாசகங்களை வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு பிள்ளைகளுக்கு விருப்பம், அரவணைக்க விருப்பம் போன்ற பல்வேறு வாசகங்களை சமூக வலைதளங்களில் சந்தேக நபர் பதிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, 30 வயதான இந்த திருமணமாகாத நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுவயதில் தான் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த நினைவு தனது மனதில் பதிந்திருப்பதால், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான வாக்கியங்களை பிரசாரம் செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறும் பொலிஸார், சந்தேகநபரின் செயலால் பிள்ளைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? அவர் பணம் சம்பாதித்தாரா? என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறுவர்கள் தொடர்பில் இவ்வாறு பகிரங்கமாக கூறுவதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய பல திணைக்களங்கள் ஊடாக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பேஸ்புக்கில் சிறுவர்கள் தொடர்பில் மோசமான தகவல் வெளியிட்ட நபர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் samugammedia நுகேகொட பிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு சமூக ஊடகங்களில் பல்வேறு வாசகங்களை வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறு பிள்ளைகளுக்கு விருப்பம், அரவணைக்க விருப்பம் போன்ற பல்வேறு வாசகங்களை சமூக வலைதளங்களில் சந்தேக நபர் பதிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதற்கமைய, கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, 30 வயதான இந்த திருமணமாகாத நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுவயதில் தான் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.அந்த நினைவு தனது மனதில் பதிந்திருப்பதால், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான வாக்கியங்களை பிரசாரம் செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறும் பொலிஸார், சந்தேகநபரின் செயலால் பிள்ளைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அவர் பணம் சம்பாதித்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேலும், சிறுவர்கள் தொடர்பில் இவ்வாறு பகிரங்கமாக கூறுவதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய பல திணைக்களங்கள் ஊடாக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.