யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந் துள்ளார்.
தெல்லிப்பழை கிளானையைச் சேர்ந்த சடையன் பாலச்சந்திரன் (வயது - 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மல்லாகத்திலிருந்து தெல்லிப்பழையை நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தவர்,
துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எதிரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்தவரை சந்திப்பதற்காக வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார்.
வீதியின் மத்திய கோட்டுப் பகுதியில் வைத்து தெல்லிப்பழையிலிருந்து யாழ். நகர் நோக்கி வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
அவர் மருத்துவமனையிலேயே நேற்றுமுன் தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
வீதியைக் கடக்க முற்பட்டவர் வாகனம் மோதி உயிரிழப்பு யாழில் சம்பவம் samugammedia யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந் துள்ளார்.தெல்லிப்பழை கிளானையைச் சேர்ந்த சடையன் பாலச்சந்திரன் (வயது - 48) என்பவரே உயிரிழந்துள்ளார். மல்லாகத்திலிருந்து தெல்லிப்பழையை நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தவர், துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எதிரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்தவரை சந்திப்பதற்காக வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார். வீதியின் மத்திய கோட்டுப் பகுதியில் வைத்து தெல்லிப்பழையிலிருந்து யாழ். நகர் நோக்கி வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவமனையிலேயே நேற்றுமுன் தினம் மாலை உயிரிழந்துள்ளார்.