வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி இன்று (07.03.2023) முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய இந்த தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
7 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (07) பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே முன்னதாக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.