இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை (Nitish Kumar) சந்தித்துள்ளார்.
அதாவது பாட்னாவில் உள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் பீகாருக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள், குறிப்பாக பௌத்த மதத்தின் ஊடாக கட்டியெழுப்பப்பட்ட உறவுகள் குறித்தும், அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு மிலிந்த மொரகொட அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.