நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, கிளாரண்டன் பகுதியில் 08.09.2023 அன்று இரவு முதல் காணாமல்போயிருந்த நபரொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா - கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா, கிளாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே (49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நானுஓயா , கிரிமிட்டிய நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாக கூறிவிட்டு அன்று இரவு வீட்டில் இருந்து சென்றுள்ளார். அவர் திருப்பி வராததால் குடும்பத்தாரும், பொது மக்களும் இணைந்து தேடுதல் நடத்தினர்.
இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு. பொலிஸார் பல கோணங்களில் விசாரணை samugammedia நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, கிளாரண்டன் பகுதியில் 08.09.2023 அன்று இரவு முதல் காணாமல்போயிருந்த நபரொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.நானுஓயா - கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.நானுஓயா, கிளாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே (49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நானுஓயா , கிரிமிட்டிய நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாக கூறிவிட்டு அன்று இரவு வீட்டில் இருந்து சென்றுள்ளார். அவர் திருப்பி வராததால் குடும்பத்தாரும், பொது மக்களும் இணைந்து தேடுதல் நடத்தினர்.இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.