வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று அதிகாலை ஒரு தொகை நகை திருட்டு போயுள்ளது.
குறித்த வீட்டில் வயோதிபப் பெண்ணொருவர் தனித்து வசித்து வந்த நிலையில் இந்த களவு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா அவர்களை தொடர்புகொண்டு கேட்டவேளை, அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
எத்தனை பவுண் நகை திருட்டு போயுள்ளது என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது வினவியவேளை தற்போது தான் விசாரணை இடம்பெறுகிறது. விசாரணை முடிந்த பின்னர் எத்தனை பவுண் என கூற முடியும் என கூறினார்.
முறைப்பாடு பதிவு செய்யும் போது எத்தனை பவுண் களவாடப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டாளர் கூறியிருப்பார் தானே என்று கேட்டவேளை, முறைப்பாட்டாளருக்கும் சரியாக தெரியவில்லை, அவர் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வந்து கூறுவதாக கூறியதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வழக்கம்பரை பகுதியில் வீட்டிலிருந்த பணம், நகை திருட்டு samugammedia வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று அதிகாலை ஒரு தொகை நகை திருட்டு போயுள்ளது.குறித்த வீட்டில் வயோதிபப் பெண்ணொருவர் தனித்து வசித்து வந்த நிலையில் இந்த களவு இடம்பெற்றுள்ளது.இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா அவர்களை தொடர்புகொண்டு கேட்டவேளை, அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.எத்தனை பவுண் நகை திருட்டு போயுள்ளது என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது வினவியவேளை தற்போது தான் விசாரணை இடம்பெறுகிறது. விசாரணை முடிந்த பின்னர் எத்தனை பவுண் என கூற முடியும் என கூறினார்.முறைப்பாடு பதிவு செய்யும் போது எத்தனை பவுண் களவாடப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டாளர் கூறியிருப்பார் தானே என்று கேட்டவேளை, முறைப்பாட்டாளருக்கும் சரியாக தெரியவில்லை, அவர் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வந்து கூறுவதாக கூறியதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.