• May 01 2024

முல்லைத்தீவில் சீறிப்பாய்ந்த மோட்டார் சைக்கிள்கள்...! பறிபோன இளைஞனின் உயிர்...! சிறுவன் படுகாயம்...!

Sharmi / Apr 10th 2024, 2:56 pm
image

Advertisement

முல்லைத்தீவில் நேற்றிரவு(08) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞனொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலைப் பகுதியில் நேற்றிரவு 8மணியளவில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். 

மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 வயதுடைய   திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த விபத்தில்  17 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



முல்லைத்தீவில் சீறிப்பாய்ந்த மோட்டார் சைக்கிள்கள். பறிபோன இளைஞனின் உயிர். சிறுவன் படுகாயம். முல்லைத்தீவில் நேற்றிரவு(08) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞனொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலைப் பகுதியில் நேற்றிரவு 8மணியளவில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 வயதுடைய   திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.அதேவேளை, குறித்த விபத்தில்  17 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement