2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123 வாக்குகளும் செலுத்தப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் எம்.பிக்கள் இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய இருவருமே வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.