• Sep 17 2024

யாழின் முக்கிய பகுதியில் உலாவும் மர்ம நபர்கள்...!தொடரும் வழிப்பறி கொள்ளை...! samugammedia

Sharmi / Nov 4th 2023, 10:31 pm
image

Advertisement

சண்டிலிப்பாய் - சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில்  பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காரைநகர்- யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ளன.

நேற்றுமுன்தினம் முச்சக்கர வண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை மறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பித்துள்ளனர்.

வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உட்பட மேலும் பலரிடம் குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. 

அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழின் முக்கிய பகுதியில் உலாவும் மர்ம நபர்கள்.தொடரும் வழிப்பறி கொள்ளை. samugammedia சண்டிலிப்பாய் - சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில்  பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காரைநகர்- யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ளன.நேற்றுமுன்தினம் முச்சக்கர வண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை மறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பித்துள்ளனர்.வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உட்பட மேலும் பலரிடம் குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement