வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன்
ஆலயத்தின் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அருங்காட்சியகம் இன்று ஆலய
அருகாமையில் உள்ள மணி மண்டபத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு
நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தலைவர் ஸ்ரீ நாகராஜ சண்முகம் தலைமையில்
திறந்துவைக்கப்பட்டது.
வரலாற்று
சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தொண்டுகள் ஆற்றிய
சமயத்தலைவர்கள்,நாகபூசணி அம்மனின் தொல்லியல் சாசனங்கள் அடங்கிய நுதன
சாசனங்கள் என்பன இவ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஊர்காவற்துறை பதவிநிலை அதிகாரி வசந்த சேன,மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்,அடியார்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதற்கான
முழு நிதிபங்கு வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன்
ஆலயத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.