• May 17 2024

யானை தாக்கி கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!

Chithra / Jan 4th 2023, 10:20 am
image

Advertisement

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை யானை தாக்கிய நிலையில்,குறித்த கடற்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கடற்படை சிப்பாய் பொல் பித்திகம மெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது -41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யானை தாக்கி கடற்படை சிப்பாய் உயிரிழப்பு மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை யானை தாக்கிய நிலையில்,குறித்த கடற்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த கடற்படை சிப்பாய் பொல் பித்திகம மெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது -41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement