• Jul 27 2024

நேரசூசி விவகாரம்...! வவுனியாவில் இ.போ.ச பேருந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி தாக்குதல் முயற்சி...!

Sharmi / Apr 13th 2024, 1:31 pm
image

Advertisement

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்தின் சாரதி , நடத்துநர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரித்து நின்ற சமயத்தில் அங்கு வந்த யாழ்ப்பாணம்- வவுனியா வழித்தட தனியார் பேருந்தின் சாரதி, பேருந்தினை பாதையில் நிறுத்தி விட்டு இ.போ.ச பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன்,  இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

அதன் பின்னர் இரு தரப்பினருக்கிடையே வாய்த்தர்க்கமும் இடம்பெற்றுள்ளது.

பேருந்துகளுக்கிடையிலான நேரசூசி பிரச்சினை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.


நேரசூசி விவகாரம். வவுனியாவில் இ.போ.ச பேருந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி தாக்குதல் முயற்சி. வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்தின் சாரதி , நடத்துநர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரித்து நின்ற சமயத்தில் அங்கு வந்த யாழ்ப்பாணம்- வவுனியா வழித்தட தனியார் பேருந்தின் சாரதி, பேருந்தினை பாதையில் நிறுத்தி விட்டு இ.போ.ச பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன்,  இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.அதன் பின்னர் இரு தரப்பினருக்கிடையே வாய்த்தர்க்கமும் இடம்பெற்றுள்ளது.பேருந்துகளுக்கிடையிலான நேரசூசி பிரச்சினை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement