முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நேற்றையதினம் இரவு முகநூல் நேரலையூடாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.
நேரலையில் நாமல் பதில்களை வழங்கிய நேரத்தில் நாமலை பற்றிய பல்வேறு எதிரான கருத்துக்களும் அங்கே பதிவிடப்பட்டு வந்தன.
குறிப்பாக Rest in peace என பலர் நாமலின் நேரலைக்கு கருத்துக்களாக பதிவுசெய்தனர்.
இவ்வாறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டாலும் நாமல் ராஜபக்ச சாதாரணமாக மக்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.