சங்கானையில் மதுபானசாலை ஒன்றை புதிதாக அமைப்பது தொடர்பாக தமது கருத்துக்களை தெரியப்படுத்துமாறு சங்கானை பிரதேச செயலகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அந்த வகையில், சங்கானை தபாற் கந்தோரிற்கு அண்மையில் புதிதாக மதுபானசாலையை அமைப்பதற்கு உரிமையாளர் ஒருவரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியில் மதுபானசாலையை அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் அனுமதிக்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 22 திகதிக்கு முன்னதாக சங்கானை பிரதேச செயலாளரிற்கு அல்லது குறித்த பகுதியின் கிராம சேவையாளரிற்கு இது தொடர்பான தமது கருத்துக்களை முன்வைக்குமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.