• May 04 2024

விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி..! மொட்டுக் கட்சியின் அதிருப்தியாளர்கள் இணைவு

Chithra / Apr 12th 2024, 8:57 am
image

Advertisement

 

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின்   தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை மையமாகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளது. 

குறித்த கூட்டணியில் மொட்டுக் கட்சியின் அதிருப்தியாளர்களான சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டளஸ் அலஹப்பெரும, 

சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மொட்டுக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர். 

புதிய அரசியல் கூட்டணியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி கொழும்பு - கிருலப்பனையில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. 

அதன்போது தேசிய சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் ​வேட்பாளர் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளது.

விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி. மொட்டுக் கட்சியின் அதிருப்தியாளர்கள் இணைவு  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின்   தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை மையமாகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளது. குறித்த கூட்டணியில் மொட்டுக் கட்சியின் அதிருப்தியாளர்களான சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டளஸ் அலஹப்பெரும, சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மொட்டுக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர். புதிய அரசியல் கூட்டணியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி கொழும்பு - கிருலப்பனையில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. அதன்போது தேசிய சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் ​வேட்பாளர் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement