• May 21 2024

மார்ச் 09 ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது – வாசுதேவ வெளியிட்ட தகவல்

Chithra / Feb 7th 2023, 9:54 am
image

Advertisement

சுதந்திர மக்கள் கூட்டணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகிச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கி தீர்ப்பிற்கு பின்னர் அவர் கூட்டணி விவகாரத்தில் ஈடுபாடுடன் செயற்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரை தவிர ஏனைய உறுப்பினர் கூட்டணியில் இணக்கமாக செயற்படுகிறார்கள். 

இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம்.

தேர்தலுக்கு தயார் இல்லை என்பதால் மக்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குள்ளாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெறாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகின்றார்.

தேர்தலுக்கு அரசாங்கம் முழுமையாக தயார் இல்லை என்பதால் தேர்தல் பிற்போடப்படும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக உள்ளோம். எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.

பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.-  என்றார்.

மார்ச் 09 ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது – வாசுதேவ வெளியிட்ட தகவல் சுதந்திர மக்கள் கூட்டணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகிச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கி தீர்ப்பிற்கு பின்னர் அவர் கூட்டணி விவகாரத்தில் ஈடுபாடுடன் செயற்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரை தவிர ஏனைய உறுப்பினர் கூட்டணியில் இணக்கமாக செயற்படுகிறார்கள். இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம்.தேர்தலுக்கு தயார் இல்லை என்பதால் மக்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குள்ளாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெறாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகின்றார்.தேர்தலுக்கு அரசாங்கம் முழுமையாக தயார் இல்லை என்பதால் தேர்தல் பிற்போடப்படும்.உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக உள்ளோம். எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.-  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement