வெளிநாடுகளில் காணப்படுவதை போன்று பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் சோதனை அடிப்படையில் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இது சென்னையிலுள்ள நான்கு இடங்களிலே வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அங்குள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இயந்திரத்தில் பணம் செலுத்தும் பட்சத்தில் தேவையான மதுபான வகை வந்துவிடும்.
மேலும் 21 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்த இயந்திரத்தின் மூலம் மதுபானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அதில் அத்துமீறல்களை தடுப்பதற்காக இயந்திரத்தின் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர் விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தானியங்கி மது இயந்திரமானது டாஸ்பாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.