பெண் பேராசிரியர் ஒருவர் நிர்வாணமாக போராட்டத்தினை முன்னெடுப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரித்தானியாவில் பெண் உரிமைகளை முன்வைத்து பல்கலைக்கழக பேராசிரியர் விக்டோரியா பேட்மேன் என்பவரே நிர்வாண போராட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணி புரிந்து வரும் விக்டோரியா பேட்மேன், ஆடையின்றி நிர்வாணமாக பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
பிரித்தானியா மற்றும் வேல்ஸின் பொது வெளியில் நிர்வாணமாக இருப்பது குற்றமல்ல என்பதுடன் ஆடை இல்லாமல் போராட்டம் செய்வது சர்ச்சையான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மறுக்கப்பட்டால்,பெண்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் பெண்கள் மீதான பிரெக்ஸிட்டின் விளைவு ஆகிய பல்வேறு போராட்டங்களை விக்டோரியா நடத்தியுள்ளார்.
தனது போராட்டம் தொடர்பாக விக்டோரியா, தனது ஆடையில்லாத இத்தகைய போராட்டத்தினை மக்கள் விமர்சித்தாலும், போராட்டத்திற்கான காரணம் குறித்து நன்கு விவாதிக்கபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு வரையறை சொல்வது, பெண்களை ஒடுக்கி வைப்பதுடன் பெண்ணின் மானத்தை கொண்டு அவர்களை பற்றி எடை போடுவது அவமரியாதை என்பதுடன் எந்த வரையறையுமின்றி அனைத்து பெண்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் விக்டோரியா மேலும் தெரிவித்துள்ளார்.
நிர்வாணப் போராட்டம் நடத்தும் பெண்- வெளியான காரணம்samugammedia பெண் பேராசிரியர் ஒருவர் நிர்வாணமாக போராட்டத்தினை முன்னெடுப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரித்தானியாவில் பெண் உரிமைகளை முன்வைத்து பல்கலைக்கழக பேராசிரியர் விக்டோரியா பேட்மேன் என்பவரே நிர்வாண போராட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணி புரிந்து வரும் விக்டோரியா பேட்மேன், ஆடையின்றி நிர்வாணமாக பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.பிரித்தானியா மற்றும் வேல்ஸின் பொது வெளியில் நிர்வாணமாக இருப்பது குற்றமல்ல என்பதுடன் ஆடை இல்லாமல் போராட்டம் செய்வது சர்ச்சையான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மறுக்கப்பட்டால்,பெண்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் பெண்கள் மீதான பிரெக்ஸிட்டின் விளைவு ஆகிய பல்வேறு போராட்டங்களை விக்டோரியா நடத்தியுள்ளார்.தனது போராட்டம் தொடர்பாக விக்டோரியா, தனது ஆடையில்லாத இத்தகைய போராட்டத்தினை மக்கள் விமர்சித்தாலும், போராட்டத்திற்கான காரணம் குறித்து நன்கு விவாதிக்கபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.பெண்களுக்கு வரையறை சொல்வது, பெண்களை ஒடுக்கி வைப்பதுடன் பெண்ணின் மானத்தை கொண்டு அவர்களை பற்றி எடை போடுவது அவமரியாதை என்பதுடன் எந்த வரையறையுமின்றி அனைத்து பெண்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் விக்டோரியா மேலும் தெரிவித்துள்ளார்.