வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து, இலங்கைக்கும், ஓமானுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான, மூன்றாம் சுற்று அரசியல் விவகார கலந்தாலோசனை, நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, விவகாயம், சுற்றுலாத்துறை, கல்வி, உயர்கல்வி, மீன்பிடி, வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, தொழில்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.