சிலரின் சுயலாப தேவைகளுக்காகவே பிரபாகரன் மீண்டும் வருகிறார் என்ற பொய்யான தகவல் பரப்படுவதாகவும் பிரபாகரன் இந்த உலகத்திலேயெ இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கோள்விக்கு பதில் வழங்கியிருந்தார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீராப் பிரச்சனையாக வைத்திருப்பதற்காகவே பிரபாகரின் மீள்வருகை தொடர்பான செய்திகள் வெளியிடப்படுவதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகின்றார்.
பிரபாகரனின் மீள்வருகை தொடர்பான அறிவிப்பு வருவதற்கு முன்பாக மக்கள் குழம்பிய நிலையில் இருந்ததாகவும் ஆனால் இந்த அறிவிப்பின் பின்னர் மக்கள் தெளிவாகியுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
தான் எந்த சந்தர்பத்திலும் முழங்காலில் தவண்டு எவரின் கால்களையும் நக்கியது கிடையாது என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் சரணடைந்ததும் கிடையாது என்றும் ஆனால் கைது செய்யப்பட்டிருந்ததாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
எந்த சந்தர்பத்திலும் முழங்காலில் தவண்டு எவரின் கால்களையும் நக்கியது கிடையாது – டக்ளஸ் SamugamMedia சிலரின் சுயலாப தேவைகளுக்காகவே பிரபாகரன் மீண்டும் வருகிறார் என்ற பொய்யான தகவல் பரப்படுவதாகவும் பிரபாகரன் இந்த உலகத்திலேயெ இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கோள்விக்கு பதில் வழங்கியிருந்தார்.தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீராப் பிரச்சனையாக வைத்திருப்பதற்காகவே பிரபாகரின் மீள்வருகை தொடர்பான செய்திகள் வெளியிடப்படுவதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகின்றார்.பிரபாகரனின் மீள்வருகை தொடர்பான அறிவிப்பு வருவதற்கு முன்பாக மக்கள் குழம்பிய நிலையில் இருந்ததாகவும் ஆனால் இந்த அறிவிப்பின் பின்னர் மக்கள் தெளிவாகியுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.தான் எந்த சந்தர்பத்திலும் முழங்காலில் தவண்டு எவரின் கால்களையும் நக்கியது கிடையாது என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் சரணடைந்ததும் கிடையாது என்றும் ஆனால் கைது செய்யப்பட்டிருந்ததாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.