• May 17 2024

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..! கிளிநொச்சியில் சோகம்

Chithra / Sep 30th 2023, 10:51 am
image

Advertisement

 

கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து   உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண் குழந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, ஹபராதுவ, கடலுவ பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன 14 வயது சிறுவனை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினருடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த போதே குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு. கிளிநொச்சியில் சோகம்  கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து   உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண் குழந்தையே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, ஹபராதுவ, கடலுவ பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.காணாமல் போன 14 வயது சிறுவனை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினருடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த போதே குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement