பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி- பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம்(05) கடற்றொழில் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்று வரும் அதேவேளை, திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளசுக்கு எதிர்ப்பு. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி- பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில், இன்றைய தினம்(05) கடற்றொழில் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்று வரும் அதேவேளை, திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.