• May 03 2024

மட்டக்களப்பின் முக்கிய பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களால் பரபரப்பு...!

Sharmi / Apr 5th 2024, 4:30 pm
image

Advertisement

மட்டக்களப்பு வாகரை  பிரதேசத்தில் வெடி பொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாகரை ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய காணியொன்றில் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இன்று காலை வழக்கம் போல் குறித்த காணியில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக நீர் குழாய் பொருத்தும் முகமாக குழியொன்றினை தரையில் வெட்டிய போது பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டு சுற்றப்பட்ட நிலையில் மர்மப் பொருள் தென்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள 233 ஆவது வாகரை இராணுவப் படைப் பிரிவிலுள்ள இராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்த இராணுவத்தினர்,  கதிரவெளி விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் அவற்றினை மீட்டு வாகரை பொலிசாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது 81 மோட்டார் துப்பாக்கி, அதற்கு பொருத்தும் பரல்-1,பை போட்-1,வேஸ் பிளேட்-1 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இவை கடந்த காலத்தில் தமிழ் ஆயுத குழுக்களால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்தனர்.

இதன்போது வாகரை 233 ஆவது படைப் பிரிவின் இராணுவ உயர் அதிகாரிகள்,பொலிசார் ஆகியோர்கள் உடன் சமூகமளித்திருந்தனர்.



மட்டக்களப்பின் முக்கிய பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களால் பரபரப்பு. மட்டக்களப்பு வாகரை  பிரதேசத்தில் வெடி பொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வாகரை ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய காணியொன்றில் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இன்று காலை வழக்கம் போல் குறித்த காணியில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக நீர் குழாய் பொருத்தும் முகமாக குழியொன்றினை தரையில் வெட்டிய போது பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டு சுற்றப்பட்ட நிலையில் மர்மப் பொருள் தென்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள 233 ஆவது வாகரை இராணுவப் படைப் பிரிவிலுள்ள இராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்த இராணுவத்தினர்,  கதிரவெளி விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் அவற்றினை மீட்டு வாகரை பொலிசாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.இதன்போது 81 மோட்டார் துப்பாக்கி, அதற்கு பொருத்தும் பரல்-1,பை போட்-1,வேஸ் பிளேட்-1 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இவை கடந்த காலத்தில் தமிழ் ஆயுத குழுக்களால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்தனர்.இதன்போது வாகரை 233 ஆவது படைப் பிரிவின் இராணுவ உயர் அதிகாரிகள்,பொலிசார் ஆகியோர்கள் உடன் சமூகமளித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement