2024 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1,066 மத்திய நிலையங்களில் இந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதற்கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மதிப்பீட்டுப் பணிகளில் நாடு முழுவதிலும் 16,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முதலாம் திகதி ஆரம்பம் 2024 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1,066 மத்திய நிலையங்களில் இந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதற்கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மதிப்பீட்டுப் பணிகளில் நாடு முழுவதிலும் 16,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.